பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தர்மபுரி
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் சுங்கரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி (வயது 50). தொழிலாளியான இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியதாகவும் அந்த கடனுக்குரிய பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கவுரி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார், பிரபா (30), ராஜேஸ்வரி (65), சங்கரி, காளியப்பன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story