தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு


தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு
x

தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியை அடுத்த நக்கல்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). கூலித்தொழிலாளி. இவருடைய சகோதரி சத்தியபிரியாவுக்கும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த உத்தப்பாடியை சேர்ந்த தர்மதுரை (30) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 5-ந் தேதி ஒரு நிகழ்ச்சிக்காக ஆலப்பட்டி காலனிக்கு தர்மதுரை வந்தார். அப்போது அவருக்கும் சக்திவேலுக்கும் இடையே வாய்தாகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தர்மதுரை, சக்திவேலை தாக்கி அவருடைய காதை கடித்து விட்டார். இதில் படுகாயமடைந்த சக்திவேல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் தொழிலாளி காதை கடித்த தர்மதுரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story