தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Oct 2022 6:45 PM GMT (Updated: 19 Oct 2022 6:45 PM GMT)

தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் சுபாஷ் (வயது 20). கூலித்தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் வீட்டுக்கு ஏன் தண்ணீர் வரவில்லை? என ராஜாராம் (44) என்பவரிடம் கேட்டாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜாராம், ராமகிருஷ்ணன் (46), விஜி (31) ஆகிய 3 பேர் சேர்ந்து சுபாசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சுபாஷ் இதுகுறித்து கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவின்குமார் வாலிபரை தாக்கிய ராஜாராம் உள்பட பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


Next Story