இருதரப்பினர் மோதல்


இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 10:24 AM GMT)

ஓசூர் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகேயுள்ள தோட்டகிரியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது32). டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (40). உறவினர்களான இவர்களுக்குள் நில தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நாகராஜ், ரோஜா, அனுஜா, லோகேஷ் (35), சிவக்குமார் (32), கோபி (36), மஞ்சு (34) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story