கோவில் திருவிழாவில் அனுமதியின்றிஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 10 பேர் மீது வழக்கு


கோவில் திருவிழாவில் அனுமதியின்றிஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 10 பேர் மீது வழக்கு
x
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லிபாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் உரிய அனுமதி பெறாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் அனுமதியின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய கோவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

1 More update

Next Story