கோவில் திருவிழாவில் அனுமதியின்றிஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 10 பேர் மீது வழக்கு

மோகனூர்:
மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லிபாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் உரிய அனுமதி பெறாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் அனுமதியின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய கோவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





