மின் மோட்டாரை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு


மின் மோட்டாரை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த அர்த்தனாரி மகன் ரவி (வயது 45). இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் ரவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (55), சரவணன் (47), சீனிவாசன் (52) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து நேற்று ரவியின் விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவி பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கணேசன், சரவணன், சீனிவாசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story