கந்தம்பாளையம் அருகேவேலி கற்களை உடைத்ததாக 3 பேர் மீது வழக்கு


கந்தம்பாளையம் அருகேவேலி கற்களை உடைத்ததாக 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:30 AM IST (Updated: 3 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் பார்த்திபன் (வயது 33). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் இரும்பு பாலம் என்ற இடத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்து கற்கள் நட்டும், சுற்றிலும் முள்வேலி அமைக்க கற்களை நட்டும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, போத்தன், முத்தாயி ஆகியோர் அங்கு சென்று நிலத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என கூறி சர்வே செய்து நட்டு வைத்திருந்த கற்கள், வேலி அமைக்க நட்டு வைத்திருந்த 30 கற்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், பார்த்திபனை மிரட்டினர். இதுகுறித்து அவர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வேலுசாமி, போத்தன், முத்தாயி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story