பொம்மிடி அருகே நிலத்தகராறில் விவசாயி குடும்பத்தினரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


பொம்மிடி அருகே நிலத்தகராறில் விவசாயி குடும்பத்தினரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM GMT (Updated: 19 Jun 2023 12:52 AM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முனுசாமி மகன் மகாலிங்கம் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பு குமாருக்கு சாதகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் குமார் சமன் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்துக்காரரான முனுசாமி, அவருடைய மருமகள் சரண்யா, இவருடைய அண்ணன் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து பொக்லைன் எந்திர டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கேட்ட குமார், அவருடைய மனைவி மலர்விழி (39), மகன் மோதிநாத் (20), ஆகியோரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து மலர்விழி கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் விசாரணை நடத்தி முனுசாமி (65), மருமகள் சரண்யா (25), சரண்யாவின் அண்ணன் அருண்குமார் (42) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story