அரசு இடத்தை தனியாருக்கு விற்ற 2 பேர் மீது வழக்கு


அரசு இடத்தை தனியாருக்கு விற்ற 2 பேர் மீது வழக்கு
x

நெல்லையில் அரசு இடத்தை தனியாருக்கு விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் வசந்தபுரத்தை சேர்ந்தவர் இன்பராஜ். கிருஷ்ணாபுரம் சிங் நகரை சேர்ந்தவர் துரை. இவர்கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு குறிச்சி பகுதியில் உள்ள இடத்தை பாளையங்கோட்டை ராஜேந்திரநகரை சேர்ந்த ஜெபகுமார் (32) என்பவருக்கு ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தனர். சில மாதங்களுக்கு பின்னர் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்பதும், தற்போது அங்கு ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதி கட்டுமான பணி நடந்து வருவதும் ஜெபகுமாருக்கு தெரியவந்தது. இதனால் ஜெபகுமார் தன்னிடம் இடத்தை விற்ற இன்பராஜ், துரையிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெபகுமார் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story