போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு


போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 March 2023 7:00 PM GMT (Updated: 12 March 2023 7:00 PM GMT)

பெரியகுளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

உத்தமபாளையம் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தேனி பங்களாமேட்டை சேர்ந்த மோனிஷா (வயது 26) என்பவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மோனிஷா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி வழக்கு விசாரணைக்காக வந்த மோனிஷாவை லட்சுமிபுரம் அருகே உள்ள வரட்டாறு பகுதியில் பிச்சைமணி அவரது தந்தை ராஜா, தாய் சந்திரா ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மோனிஷா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ்காரர் பிச்சைமணி உள்பட 3 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story