முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு


முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட்டல் தொழிலாளி

கோவை கரும்புக்கடை சவுகார் நகரை சேர்ந்தவர் ஆஸ்மி (வயது 28). இவருக்கும், இவருடைய உறவினரான ஓட்டல் தொழிலாளி வாசிம் அக்ரமுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ஆஸ்மியின் பெற்றோர் வரதட்சணையாக 50 பவுன் நகையும், பணமும் கொடுத்தனர்.

ஆனால் திருமணம் முடிந்த பின்னர், வாசிம் அக்ரம், ஆஸ்மியிடம் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் தெரிவித்தார். அவர்களும் சரியாகிவிடும் என்று கூறியதாக தெரிகிறது. இருந்தபோதிலும் அவர் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது.

2-வது திருமணம்

இதன் காரணமாக ஆஸ்மி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் வாசிம் அக்ரம் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிந்ததும் ஆஸ்மி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் தனது கணவர் வீட்டுக்கு சென்று கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரிடம் இது குறித்து கேட்டார். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே இது குறித்து ஆஸ்மி கோவை மேற்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஓட்டல் தொழிலாளியான வாசிம் அக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story