புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நொய்யல் அருகே குந்தாணி பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த சம்பூர்ணம் (வயது 73) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பூர்ணம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story