மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

விழுப்புரம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 50). இவருடைய மகள் பவித்ராவை(25) அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(30) என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பவித்ரா, தனது கணவர் ரவிக்குமாரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த சூழலில் ரவிக்குமார், தனது மனைவி பவித்ராவை அழைக்க சென்றபோது அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார், தனது மாமியார் உஷாவை(45) திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாரங்கபாணி வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரவிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






