புறாக்களை திருடிய வாலிபர் மீது வழக்கு


புறாக்களை திருடிய வாலிபர் மீது வழக்கு
x

சிவகிரி அருகே புறாக்களை திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துச்செல்வன் மனைவி முருக லட்சுமி (வயது 30). இவர் தனது வீட்டின் காம்பவுண்டிற்குள் புறா கூண்டு அமைத்து அவற்றில் விலை உயர்ந்த புறாக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் புறாக்கூண்டில் இருந்து சத்தம் கேட்டதை அறிந்து வெளியே வந்து பார்த்தபோது, தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மகேந்திரன் (19) என்பவர் புறா கூண்டில் இருந்த விலை உயர்ந்த 12 புறாக்களை பிடித்துக்கொண்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து முருக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story