வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு

அம்பையில் வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
களக்காடு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் அம்பை-முக்கூடல் சாலையில் உள்ளது. அந்த அலுவலகத்தில் கடந்த 13-ந்தேதி அத்துமீறி நுழைந்த ஒருவர் அனுமதி இன்றி செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அதுகுறித்து வனத்துறையினர் கேட்டபோது அவர் சரிவர பதில் அளிக்காமல் வெளியேறி உள்ளார். இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கொடுத்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





