பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x

சாத்தான்குளத்தில் பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை மகன் சதீஷ்குமார் (வயது 25). இவருடைய மனைவி சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழியைச் சேர்ந்த கந்தசாமி மகள் துர்க்காம்பிகை. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துர்க்காம்பிகை கணவரை விட்டு பிரிந்து அறிவான்மொழியில் பெற்றோர் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவர் சதீஷ்குமார், அவரது சகோதரர் சுபாசுடன் (23) மாமனாரின் வீட்டுக்கு வந்தார். அங்கு சதீஷ்குமார், துர்க்காம்பிகையிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், சுபாஷ் ஆகிய இருவரும் அவதூறாக பேசி தென்னை மட்டையால் துர்க்காம்பிகையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த துர்க்காம்பிகை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் சதீஷ்குமார், சுபாஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story