முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை
x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் விஜயபாஸ்கர். இவர், மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் வந்தது. விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆஜராகினார். அவரது மனைவி ரம்யா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் லஞ்சஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களில் சில நகல்கள் வழங்கும் படி விஜயபாஸ்கர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.


Next Story