வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு


வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
x

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், வடுகபட்டி, ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம் சவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு-க்கு வாங்கிச் சென்றனர். தற்போது சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கிச் செல்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ12,500-க்கு வாங்கி செல்கின்றனர். வரத்து குறைந்துள்ளதால் ‌மரவள்ளி‌ கிழங்கின் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story