சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

ஈரோடு

பெருந்துறை

சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

கால்நடைகள் வரத்து அதிகரிப்பு

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வழக்கம்போல நேற்று கால்நடைச் சந்தை கூடியது. இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதே போல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 150-ம் வந்திருந்தன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்தது.

ரூ.1 கோடிக்கு விற்பனை

விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விலை போனது.

சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த கால்நடைகளை ஈரோடு, திருப்பூர், கரூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் வாங்கிச் சென்றனர்.


Next Story