மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை


மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளியில்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை
x

மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடந்து கலவரத்தில் முடிந்தது.இதற்கிடையே, மாணவி மரணம் தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், சந்தேகம் மரணம் என்கிற வகையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

2-வது நாளாக விசாரணை

இந்த நிலையில், மாணவியின் தரப்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையிலான குழுவினர் பள்ளியில் ஆய்வு செய்து, விசாரணையை தொடங்கினார்கள்.

இதையடுத்து நேற்று 2-வது நாளாக சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது மாணவி விழுந்து கிடந்த இடத்தையும், 3-வது மாடியில் மாணவி தங்கி இருந்த விடுதியையும் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் அவருடன் படித்த சக மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story