மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை


மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை
x

மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

மாணவி லாவண்யா தற்ெகாலை வழக்கு தொடர்பாக மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மகள் லாவண்யா(வயது 17). இவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

மாணவி லாவண்யா, கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி விஷம் குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 19-ந் தேதி உயிரிழந்தார்.

வீடியோ வெளியாகி பரபரப்பு

மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விடுதி வார்டன் மற்றும் பள்ளி காப்பாளர் தன்னை மதம் மாற வலியுறுத்தியதால் விஷம் குடித்ததாக லாவண்யா பேசியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 31-ந் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

சி.பி.ஐ. விசாரணை

அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை தொடரலாம் என கூறியது.

இதனை அடுத்து சி.பி.ஐ. 24 பக்கங்கள் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி சி.பி.ஐ. துணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையிலான குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளி மற்றும் விடுதிக்கு வந்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

மீண்டும் விசாரணை

அதனைத்தொடர்ந்து பல்வேறு நாட்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் மாணவி தங்கி இருந்த பள்ளி விடுதி, பள்ளிக்கூடம் மற்றும் வடுகர்பாளையம் ஆகிய இடங்களிலும், தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் விசாரணை நடத்தினர்.

4 மணி நேரம் நடந்தது

பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று நண்பகல் 12 மணிக்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் மதியம் 2 மணி வரையில் விசாரணை நடத்தி விட்டு திரும்பி சென்றனர்.

பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு வந்து விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து 5 மணி வரையில் இந்த விசாரணை நடந்தது. மொத்தம் 4 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளதாக தெரிகிறது.


Related Tags :
Next Story