செவிலியர்கள் தினம் கொண்டாட்டம்


செவிலியர்கள் தினம் கொண்டாட்டம்
x

செவிலியர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

உலக செவிலியர் தின விழாவை, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சுர்கள் ஒவ்வொருவருக்கும் ரோஜா பூக்கள் கொடுத்தும், நெற்றியில் சந்தனமிட்டும் கேக் வெட்டியும் கொண்டாடினர். பின்னர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், டாக்டர் கண்மணி, செவிலியர் கண்காணிப்பாளர் (முதல் நிலை) விஜயகுமாரி உள்ளிட்ட ஏராளமான நர்சுகள் கலந்து கொண்டு செவிலியர் தினத்தை கொண்டாடினர்.


Next Story