சந்திராயன் நிலவில் தரையிறங்கியதால் கொண்டாட்டம்


சந்திராயன் நிலவில் தரையிறங்கியதால் கொண்டாட்டம்
x

சந்திராயன் நிலவில் தரையிறங்கியதால் கொண்டாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பாக சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதன் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதால் உலகம் முழுவதும் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இந்த சாதனையின் மூலம் நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

மாணவர்களாகிய நீங்களும் இதுபோன்று பல அறிய பல சாதனைகளை நிகழ்த்தி வருங்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக வளர வேண்டும், என்றார். மேலும் பள்ளி வளாகத்தில் சந்திராயன் செயற்கைக்கோள் படம் வரைந்து வண்ணமிட்டு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராதா, துணைத் தலைவர் ராஜாமணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story