கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்தவரை தேடி வருகிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மணப்படை வீடு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவருடைய மகன் அவனிஷ் (வயது 19). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, அவனிஷிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





