பூக்கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது


பூக்கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 7:00 PM GMT (Updated: 16 Jun 2023 7:00 PM GMT)

பூக்கடைக்காரரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவர் சின்னசாமி மகன் முனியப்பன் (வயது 28). இவர் பாளையங்கோட்டை சீனிவாச நகரில் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் முனியப்பன் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் முனியப்பனை மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியப்பன் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் இம்மானுவேல் காலனியை சேர்ந்த சுதாகர் (23) என்பவர் முனியப்பனிடம் செல்போன்களை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story