செல்போன் திருடியவர் கைது


செல்போன் திருடியவர் கைது
x

பழனியில், வீடு புகுந்து செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி அடிவாரம் இட்டேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 44). நேற்று முன்தினம் இவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தீனதயாளனின் செல்போனை திருடி சென்றார். இதுகுறித்து பழனி அடிவார போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெரு பகுதியை சேர்ந்த வாய்க்கால்சாமி (43) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வாய்க்கால்சாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story