புழல் சிறையில் 4 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்


புழல் சிறையில் 4 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
x

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

புழல்,

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலான கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். சிறை போலீசாரும் அடிக்கடி சோதனை செய்து செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட சிறை போலீசார் விசாரணை சிறையில் உள்ள கைதிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ள நெப்போலியன்(வயது 37), சங்கர்(30), சபரி(28) மற்றும் அப்பன் ராஜ்(27) ஆகிய 4 கைதிகள் செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்து, சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன்கள் கிடைத்தது எப்படி? அந்த செல்போன்கள் மூலம் அவர்கள் யாருடன் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story