மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்; எச்.ராஜா பங்கேற்பு


மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்; எச்.ராஜா பங்கேற்பு
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் எச்.ராஜா பங்கேற்றார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெரு வாஜ்பாய் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, கட்சி, குடும்பத்தில் கட்டுப்பாடு இல்லை. தமிழக மக்களுக்கு தி.மு.க. ஒரு பாரமாக இருக்கிறது. மத்திய அரசின் வெற்றிக்கு காரணம் ஒவ்வொன்றிலும் மக்களின் பங்களிப்பு உள்ளது. இதனால் மக்கள் ஏற்று இருக்கிறார்கள். 10 கோடி குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடி தான். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 30 இடங்களை வெல்ல வேண்டும். அதற்கு நாம் உறுதி எடுத்து உழைக்க வேண்டும்" என்றார்.

1 More update

Next Story