மழைநீர் சேகரிப்பு பணிகளை மத்திய அரசு அதிகாரி ஆய்வு


மழைநீர் சேகரிப்பு பணிகளை மத்திய அரசு அதிகாரி ஆய்வு
x

மழைநீர் சேகரிப்பு பணிகளை மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி ஜெயா ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

மழைநீர் சேகரிப்பு பணிகளை மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி ஜெயா ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி பழங்குடி நலத்துறை கூடுதல் செயலாளர் ஜெயா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பது தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழைநீர் சேகரிக்க நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் ஆகியன தொடர்பாக விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

கள ஆய்வு

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் இணைந்து அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழியில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு பணிக்கான தடுப்பணைகள் கட்டும் பணிகள், குடிமராமத்து செய்யப்பட்ட ஊருணிகள், மழை நீரை உறிஞ்சும் அகழிகள், நீரினை மறுசுழற்சி செய்யும் வடிவமைப்புகள் ஆகியவற்றை பொறுப்பு அதிகாரி ஜெயா நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஜமீன் பகவான், செயற்பொறியாளர் சக்தி முருகன், உதவி அதிகாரிகள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story