மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி


மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி
x

நாகர்கோவிலில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படைவீரர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படைவீரர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.

மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பண்ணையூரைச் சேர்ந்தவர் ஐவின்ராஜா (வயது 25). இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் மதியம் ஐவின்ராஜா, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கல்லூரி மாணவர் கண்ணன் (22) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பாம்பன்விளையில் இருந்து ஆசாரிபள்ளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ஐவின்ராஜா ஓட்டினார்.

பரிதாப சாவு

அப்போது ஆசாரிப் பள்ளம் அருகே வந்த போது அந்த வழியாக சென்ற காரின் பின்பக்கம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஐவின்ராஜாவுக்கு இடது பக்க கழுத்து, வலது பக்க நெற்றி, இடது காது பகுதி ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து சென்ற கண்ணன் படுகாயத்துடன் உயிருக்காக போராடினார்.

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஐவின்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக கண்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story