மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடியேற்று விழா


மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடியேற்று விழா
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை ராம்நகர் மற்றும் எம்.பி.டி.சி. செட் ஆகிய இரு இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது கலந்துகொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாற்று கட்சியில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோர் மாநில பொது செயலாளர் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

தொடர்ந்து ஹாரூன் ரசீது பேசும் போது, புதிதாக சேர்ந்தவர்கள் மத நல்லிணக்கத்துடன் பழக வேண்டும், ஏழை, எளியோருக்கு உதவ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிராஜுதீன், நகர மற்றும் மாவட்ட துணைசெயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story