பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா


பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
x

கடையநல்லூில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூரில் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில், பி.எஸ்.என்.எல். அருகே பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனரேஞ்சர் சுரேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வனவர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். முடிவில், பள்ளி முதல்வர் அந்தோணி நன்றி கூறினார்.


Next Story