தேவூர் அருகே25 தேர்தல்களில் ஓட்டுப்போட்ட 108 வயது மூதாட்டிஉதவி கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டு


தேவூர் அருகே25 தேர்தல்களில் ஓட்டுப்போட்ட 108 வயது மூதாட்டிஉதவி கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
x

தேவூர் அருகே 25 தேர்தல்களில் ஓட்டுப்போட்ட 108 வயது மூதாட்டிக்கு உதவி கலெக்டர் லோகநாயகி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சேலம்

தேவூர்

தேவூர் அருகே 25 தேர்தல்களில் ஓட்டுப்போட்ட 108 வயது மூதாட்டிக்கு உதவி கலெக்டர் லோகநாயகி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சர்வதேச முதியோர் தினம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் மூத்த வாக்காளர்கள் 90 பேருக்கு பாராட்டு விழா நடந்தது. சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி சால்வை அணிவித்து வேட்டி, சேலை வழங்கி கவுரவித்தார். முன்னதாக சுண்ணாம்புக்கரட்டூரில் மருதன் மனைவி பூவாயி என்ற மூதாட்டி 108 ஆண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதுவரை இந்த மூதாட்டி 25 முறைஎம்.பி.,எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வந்தார்.

இதையடுத்து சர்வதேச முதியோர் தினத்தையொட்டி சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி, பூவாயி வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சான்றிதழ் கொடுத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.

மூத்த வாக்காளர்களுக்கு சான்றிதழ்

தொடர்ந்து தேவூர் சமுதாய கூடத்தில் 80 வயதை கடந்து தேர்தலில் வாக்களித்து வரும் 90 மூத்த வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சான்றிதழ்களை உதவி கலெக்டர் வழங்கினார். பின்னர் வேட்டி, சேலைகள் வழங்கி அவர்களை கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சங்ககிரி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன், கருப்பண்ணன், செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story