வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்


வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்
x

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்க செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி செய்யப்படும்.

மழை பெய்ததால் பாதிப்பு

இந்த பகுதியில் ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உற்பத்தி தொடங்கிய ஜனவரி மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன்காரணமக உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

உற்பத்தி நிறுத்தம்

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு பின்பு உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story