தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, திருச்சி, நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story