அரக்கோணம்-வேலூர் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே


அரக்கோணம்-வேலூர் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே
x

அரக்கோணம்-வேலூர் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செயவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

அரக்கோணம்-வேலூர் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செயவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,

பராமரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்க்கண்ட மின்சார ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி, அரக்கோணம்-வேலூர் இடையே காலை 7.10 மணி, மதியம் 2.05 மணிக்கும், வேலூர்-அரக்கோணம் இடையே காலை 10 மணி, மாலை 5.10 மணிக்கும், அரக்கோணம்-காட்பாடி இடையே இரவு 9 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும்.

காட்பாடி-அரக்கோணம் இடையே காலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story