சாத்தூர் நகரசபை கூட்டம்


சாத்தூர் நகரசபை கூட்டம்
x

சாத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் இளவரசன் மற்றும் நகர் மன்ற துணைத்தலைவர் அசோக் முன்னிலை வகித்தனர். இதில் 24 வார்டுகளை சேர்ந்த நகர்மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க கோரியும், பாதாள சாக்கடை பணியினை விைரந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பொறியாளர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story