வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி... உபரிநீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு...!


வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி... உபரிநீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு...!
x

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கூடுதலாக உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story