ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலி


ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலி
x

கோவளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலியானார்.

செங்கல்பட்டு

ராட்சத அலையில் சிக்கினார்

சென்னை நந்தனம் பேன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நசீர் ஷெரிப். இவரது மகன் இஸ்மாயில் ஷெரீப் (வயது 22). இவர் தனது உறவினர்களான சுலைமான், அப்சர் பாஷா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரைக்கு சென்றார். தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்திய பின்னர் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்து கொண்டிருந்தனர் அப்போது ராட்சத அலையில் இஸ்மாயில் ஷெரீப் சிக்கினார். அவரது கூச்சல் கேட்டு உடன் வந்தவர்களும் அருகில் இருந்த மீனவர்களும் கடலுக்குள் சென்று அவரை மீட்டனர்.

சாவு

இருப்பினும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இஸ்மாயில் ஷெரீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் இஸ்மாயில் ஷெரீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story