மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி


மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி
x

மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றனர்.

திருப்பூர்


மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றனர்.

தமிழக அரசின் சார்பாக மகாபலிபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை 44-வது ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடிமங்கலம் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி குடிமங்கலம் அரசு பள்ளியில் நடந்தது. இதில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். மூத்தோர் பிரிவில் அக்க்ஷயா இரண்டாம் இடத்தையும், திவ்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மாணவர்களுக்கான மூத்தோர் பிரிவில் பிரிதிவிராஜ் முதல் இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் நாளை திருப்பூரில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடுகின்றனர். குடிமங்கலம் ஒன்றிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், உடற் கல்வியாசிரியர் செந்தில் குமாரவேல் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Related Tags :
Next Story