செஸ் ஒலிம்பியாட் போட்டி பயிற்சி ஆட்டம் - ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு...!


செஸ் ஒலிம்பியாட் போட்டி பயிற்சி ஆட்டம் -  ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு...!
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் செஸ் ஆட்டத்தில் மிகஉயரிய போட்டியான இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உள்பட 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த போட்டியை சிறப்பாகவும் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு அரங்கில் 196 செஸ் போர்டுகளும், மற்றொரு அரங்கில் 512 செஸ் போர்டுகளும் மேஜைகளில் வைக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த போட்டிக்காக மாமல்லபுரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் துல்லியமாகவும், சரியாகவும் செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

இதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் இன்று செஸ் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒருநாள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.


Next Story