சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு


சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
x

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு அளித்துள்ளார்.

சென்னை,

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடந்தது .

சென்னை, தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இந்தஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

அதில் , சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு அளித்துள்ளார்.

நீர்நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.


Next Story