அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார் தலைமைச் செயலாளர் இறையன்பு...!


அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார் தலைமைச் செயலாளர் இறையன்பு...!
x

தலைமைச் செயலாளர் இறையன்பு தான் எழுதிய புத்தகங்களை அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு வழங்கியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு பல பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், இவரை சந்திக்க வருவர்கள் புத்தகம் வழங்குவது வழக்கம். இந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க தலைமைச் செயலாளர் இறையன்பு முடிவு செய்துள்ளார்.

அதன்படி சென்னை எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு, தான் எழுதிய புத்தகங்களையும், தன்னை சந்திக்க வந்தவர்கள் வழங்கிய புத்தகங்களையும் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கியுள்ளார்.


Next Story