குழந்தை மாயம் தொடர்பான புகார்: பெற்றோர்களின் டிஎன்ஏ விவரங்களைச் சேகரித்து பாதுகாக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு


குழந்தை மாயம் தொடர்பான புகார்:  பெற்றோர்களின் டிஎன்ஏ விவரங்களைச் சேகரித்து பாதுகாக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு
x

உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த கணவன், மனைவி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ,

எங்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலையில் திருமணமாகாத பெண் ஒருவருக்குப் பிறந்த ஆண் குழந்தை எங்களுக்குக் கிடைத்தது. அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயன்றபோது சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் போலீசார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3.2023-ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்த மனு மீதான விசாரணையில் ,

குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும்போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விவரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும்போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்க முடியும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story