குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள், அதனை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தி பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மேலும், குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள், ஊராட்சிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மைதிலி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா, ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார அளவிலான ஊராட்சி கூட்டமைப்பு குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story