சித்திரை விழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் - பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு


சித்திரை விழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் - பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு
x

சித்திரை விழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மதுரை


பாரதீய ஜனதா கட்சியின் மாநில ஊடகப்பிரிவு செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான நாகராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் கலெக்டர் அனிஷ்சேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கங்கை, காவிரி, வைகை நீரோட்டத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும், உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க தமிழக அரசு அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும், சித்திரை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும், சித்திரை திருவிழாவில் அசம்பாவிதங்கள் இன்றி பாதுகாப்புடன் நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஊடக மேற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story