சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்


சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 31 May 2023 10:05 PM GMT (Updated: 1 Jun 2023 7:38 AM GMT)

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்ச ண்முகவேல் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார். அங்கிருந்து புறப்பட்டு வடக்குரதவீதி, மார்க்கெட்ரோடு வழியாக பூக்குழிபொட்டல் வந்தனர். கோவில் அர்ச்சகர் சண்முகவேல் கரகத்துடன் பூக்குழி இறங்கினர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 21 அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினார்கள். இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கோவில் செயல் அலுவலர் இளமதி, எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன், சத்யபிரகாஷ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார், கோவில் பணியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை சார்பில் இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.


Next Story