வட்ட வழங்கல் அதிகாரி சிகிச்சை பலனின்றி சாவு


வட்ட வழங்கல் அதிகாரி சிகிச்சை பலனின்றி சாவு
x

விபத்தில் காயம் அடைந்த வட்ட வழங்கல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 15-ந்தேதி திருவண்ணாமலை ஐ.டி.ஐ. முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story