குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

துவாக்குடி வடக்கு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story