மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி: மகன் கண் எதிரே பரிதாபம்


மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி: மகன் கண் எதிரே பரிதாபம்
x

மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண் எதிரே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சுஜாஜினி (வயது 45). இவருடைய மகன் சஞ்சுவ் (20). இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். தாய், மகன் இருவரும் வழக்கம்போல் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றனர். ஒட்டியம்பாக்கம் மெயின் சாலை வழியாக அரசங்கழனி நோக்கி சென்றபோது, எதிரே சைதாப்பேட்டையில் இருந்து காரணை நோக்கி வந்த மாநகர பஸ் இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சாலையில் விழுந்த சுஜாஜினி, மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். சஞ்சுவ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான மாடம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்த டேவிட் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story